×

துணை கலெக்டர், துணை காவல் கண்காணிப்பாளர் பதவி குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது: மே மாதம் ரிசல்ட் டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் துணை ஆட்சியர் 18 இடம், துணை காவல் கண்காணிப்பாளர்-19, வணிகவரித்துறை உதவி ஆணையர்-10, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 14, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்-4, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களுக்கான மெயின் தேர்வுக்கு தற்காலிகமாக 3,800 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை முதல் தாள் தேர்வு நடந்தது. இந்நிலையில், தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: குரூப் 1 மெயின் தேர்வு மொத்தம் 3 நாட்கள் நடக்கிறது. இன்று(நேற்று) முதல் தாள் தேர்வும், 5ம் தேதி(இன்று) 2ம் தாள் தேர்வும், 6ம் தேதி(நாளை) 3ம் தாள் தேர்வும் நடக்கிறது. மே மாதம் மத்தியில் மெயின் தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

The post துணை கலெக்டர், துணை காவல் கண்காணிப்பாளர் பதவி குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது: மே மாதம் ரிசல்ட் டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Group 1 Maine ,Risold ,DNBSC ,Chennai ,DNPSC ,Commission ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு