×

2 மூக்கு, 2 வாய், 3 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ளது மேலமூங்கிலடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கலைவாணன் என்பவர் பசு மாடு ஒன்றை வளர்த்து வந்தார். இந்த பசுமாடு ஒரு கன்றுக் குட்டியை ஈன்றது. இந்த கன்றுகுட்டி வித்தியாசமாக இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். பிறந்த கன்றுக்குட்டிக்கு 2 தலைகள் ஒட்டியபடி இருந்தது. மேலும் 2 மூக்கு, 2 வாய் உள்ளிட்ட உறுப்புகளுடன் 3 கண்களோடு வித்தியாசமான முறையில் இருந்தது. வித்தியாசமான உருவத்துடன் பசு மாடு ஈன்ற கன்றுக்குட்டியை அக்கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்….

The post 2 மூக்கு, 2 வாய், 3 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Melamoongiladi ,Kalaivanan ,Dinakaran ,
× RELATED பலத்த காற்றுடன் மழை: இருட்டில் சிதம்பரம் ரயில் நிலையம்