- Nanganallur
- திமுக
- துர்காதேவி நடராஜன்
- ஆலந்தூர்
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
- 167வது வார்டு
- சென்னை மாநகராட்சி ஆலந்தூர்
ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 167வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துர்காதேவி நடராஜன், நேற்று நங்கநல்லூர் லட்சுமி நகர் கண்ணிகா காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘என்னை வெற்றிபெற செய்தால் நங்கநல்லூர் பகுதியில் மழைக் காலங்களில் வீடுகளை தண்ணீர் சூழ்வதை தடுக்க அகலமான வடிகால் அமைப்பேன், வரி சீரமைத்து தருவேன், தொழில்நுட்பத்துடன் புதிய பாதாள சாக்கடை அமைப்பேன்,’’ என்றார்.ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன், வட்ட செயலாளர் ஜெ.நடராஜன், தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் ஐயம்பெருமாள், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஜெயராம் மார்த்தாண்டன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஸ்ரீகாந்த், கன்டோண்மென்ட் கவுன்சிலர் விஜயசங்கர், சி.முத்து, மேனியல், இசட்.பாபு, 167வது வட்ட நிர்வாகிகள் நாகராஜன், என்.வேலு, ரமணா, பிரான்சிஸ், சதீஷ், குருமூர்த்தி, கணேசன், சூர்யநாராயனன், மகளிரணி ஜாக்குலின் சித்ரா, காங்கிரஸ் நிர்வாகிகள் குரு பாரதி, மகேஷ், லோகேஷ், பி.டி.ஜான் உள்பட பலர் பங்கேற்றனர்….
The post நங்கநல்லூர் பகுதியில் வரி சீரமைப்பு செய்ய நடவடிக்கை: திமுக வேட்பாளர் துர்காதேவி நடராஜன் உறுதி appeared first on Dinakaran.