×

பைக் விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் ரபுதின். இவரது மகன் தமிம் அன்சாரி (18). இவர் தனியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். காக்களூர் பைபாஸ் சாலை, கம்பர் தெருவைச் சேர்ந்தவர் நவீன் (22). இவர் திருவள்ளூர், பஜார் வீதியில் உள்ள பூ கடையில் வேலை செய்து வந்தார்.  இருவரும் நண்பர்கள். இரண்டுபேரும் நேற்றுமுன்தினம்  இரவு 12 மணியளவில் தங்களது இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். திருவள்ளூர் – செங்குன்றம் சாலையில் ஈக்காடு மக்காநகர் அருகில் செல்லும்போது செங்குன்றத்திலிருந்து திருவள்ளூர் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி மோதியதில் இருவரும் கண்டெய்னர் லாரியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த புல்லரம்பாக்கம் போலீசார் இளைஞர்களின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரை தேடி வருகின்றனர்….

The post பைக் விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Checkady Street ,tamim ansari ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்