×

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கட்டாய தாலி கட்ட முயன்ற வாலிபர்: பொதுமக்கள் தாக்கியதால் தற்கொலை முயற்சி

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக தாலிகட்ட முயன்ற வாலிபர், பொதுமக்கள் அடித்து விரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் குமார் (52). இவருடைய மனைவி சாந்தி (47). இவர்களுக்கு அஸ்வினி (23) ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அஸ்வினிக்கு வரும் 10ம் தேதி உறவுக்கார பையனுடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி எதிர்வீட்டில் வசிக்கும் அருண் (23)  என்பவரும், அவரது அண்ணன் இனியா (28)வும் அஸ்வினியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்களில் இனியா திருநங்கை ஆவார்.அருண் வலுக்கட்டாயமாக அஸ்வினியின் கழுத்தில் தாலி கட்ட முயற்சி செய்தார். அப்போது அஸ்வினி தடுத்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தடுத்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் அருணை அடித்து துரத்தி உள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அருண் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனடியாக அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இதுகுறித்து அஸ்வினி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி மூன்று பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து அருணுக்கு உடந்தையாக இருந்த திருநங்கை இனியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வாலிபர் ஒருவர் கட்டாய தாலி கட்ட முயற்சித்த சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கட்டாய தாலி கட்ட முயன்ற வாலிபர்: பொதுமக்கள் தாக்கியதால் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Korukipetta ,Valier ,
× RELATED சகோதரி முறையான பெண்ணை காதலித்ததால்...