
டெல்லி : இந்திய ராணுவம் பற்றி அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது தொடர்ந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. லக்னோ நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். வழக்கை ரத்து செய்யக்கோரி ராகுல் தாக்கல் செய்த மனு அலகாபாத் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது. அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.
The post இந்திய ராணுவம் பற்றி அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது தொடர்ந்த வழக்கு விசாரணைக்குத் தடை!! appeared first on Dinakaran.
