×

பெருங்களத்தூர் அருகே இன்று காலை 05.30 மணி அளவில் தீடீரென தீபற்றி எரிந்த கார்

தாம்பரம்: பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலை ஓடிய கார் தீபற்றி முழுவதும் எரிந்து நாசமானது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் உள்ளிட்ட 4 பேர் காரில் இருந்து வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் புதுக்கோட்டை அடுத்த திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்தவர் ஐய்யப்பன்(34) இவர் குடுபத்தினர் பெண் உள்ளிட்ட 4 பேர் சான்ரோகாரில் சென்னையை நோக்கி வந்தனர்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் பெருங்களத்தூர் அருகே வரும்போது காரில் புகை வந்துள்ளது, காரை அப்படியே நிறுத்துவிட்டு நான்குபேரும் வெளியேறிய நிலையில் கார் முழுவதும் எரிந்தது. அருகிள் இருந்த போக்குவரத்து போலீசார் அவ்வழியே சென்ற தண்ணீர் லாரியை நிறுத்தி தீயை அணைத்தனர், ஆனாலும் கார் முழுமையாக எரிந்து நாசமானது. இது குறித்து பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்,

புகை கிளம்பிய உடன் பெண் உள்ளிட்ட நான்கு பேரும் வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

The post பெருங்களத்தூர் அருகே இன்று காலை 05.30 மணி அளவில் தீடீரென தீபற்றி எரிந்த கார் appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Tambaram ,Bengalathur G. S. ,T Road ,Thanjavur district ,Aiyappan ,Trinchitrampalam ,Thanjavur District Pudukkottai ,Dinakaran ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...