×

ஆந்திராவிலிருந்து டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

பொன்னை : மேல்பாடி காவல் நிலையத்தில் நேற்று, ஆந்திராவில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த மேல்பாடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மனோன்மணி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல்பாடி அடுத்த பெரியமிட்டூர் பகுதியில் மணல் கடத்தி வந்த டிராக்டர் சென்றுள்ளது. பின்னர் தொடர்ந்து சென்று டிராக்டரை மடக்கி பிடித்து பார்வையிட்டனர். இதில் ஆந்திர மாநிலத்தில் இருந்து மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மணல் கடத்தி வந்த டிராக்டருடன் டிரைவரை மேல்பாடி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் டிராக்டரை ஓட்டி வந்தவர் அம்மவார்பள்ளி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 35) என்பதும், இவர் ஆந்திர மாநிலத்திலிருந்து ஓடை மணலை கடத்தி வந்ததும் தெரியவந்தது.  இதன்பேரில் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்….

The post ஆந்திராவிலிருந்து டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Melbadi ,station ,Vellore District Ponna ,
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...