×

திருப்பதியில் முதல்வர் சுற்றுப்பயணம் வான்வழியில் 10 போலீஸ் டிரோன்கள் கண்காணிப்பு

திருமலை : ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க எஸ்.பி. ஹர்ஷவர்தன் ராஜூ உத்தரவின் பேரில், 10 போலீஸ் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பு பணி நடைபெற்றது.

டிரோன் கேமிரா இருக்கும் இடத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. நகரத்தில் உள்ள உயரமான கட்டிடங்களில் தெரியாத நபர்களை அடையாளம் காணவும் இவை பயன்படுத்தப்பட்டது.

டிரோன் கேமரா காரணமாக, போக்குவரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் பிற தகவல்கள் முழுமையாக உடனுக்குடன் தெரியப்படுத்தப்படும். அதன்படி, தூக்கிவாக்கத்தில் 2 டிரோன் கேமராக்கள், கபிலதீர்த்தத்தில் 2 டிரோன் கேமராக்கள், போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் 3 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டதாக சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வினோத் குமார் தெரிவித்தார்.

முதலமைச்சரின் வருகையின் போது வான்வழிப் பாதையில் டிரோன் கேமராக்கள் மூலம் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த டிரோன் கேமராக்களில் பொது முகவரி அமைப்பும் உள்ளதால், மேம்பட்ட இணைக்கப்பட்ட டிரோன் கேமராவில் பொது முகவரி அமைப்பு மூலம் கூட்டாக் கட்டுப்பாடு செய்யப்பட்டது.

முதல்வர் வருகையின் போது, வெளியில் இருந்து வரும் எந்த அடையாளம் தெரியாத நபர்களும் முதலில் டிரோன் கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு தடுக்கப்பட்டது. தரையில் போலீசாரும், வான்வழிப் பாதையிலும் டிரோன் கேமராக்கள் மூலம் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சரின் வருகை மிகவும் அமைதியான சூழ்நிலையில் நடந்ததற்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எஸ்பி நன்றி தெரிவித்தார்.

The post திருப்பதியில் முதல்வர் சுற்றுப்பயணம் வான்வழியில் 10 போலீஸ் டிரோன்கள் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Thirumalai ,AP ,Chandrababu Naidu ,Tirupathi district ,S. B. ,Harshavardhan Raju ,Turupati ,
× RELATED போலீசாரை தள்ளிவிட்ட விவகாரம்...