தொண்டி, ஜூலை 19: திருவாடானை வட்டார அளவில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற செஸ் போட்டியில் நம்புதாளை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர், மாவட்ட அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார். திருவாடானை குறுவட்டார அளவில் பள்ளிகளுக்கிடையேயான கேரம் போர்டு, வளையப்பந்து விளையாட்டு போட்டி திருவெற்றியூர் நார்பர்ட் பள்ளியில் நேற்று நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் மரிய சூசை போட்டிகளை துவங்கி வைத்தார்.
முதல்வர் கிருஸ்டினால், தலைமை ஆசிரியர் அண்ணாத்துரை முன்னிலை வகித்தனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். ஒரியூர் பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் கால்பந்து கடற்கரை கையுந்து பந்து மற்றும் மேசைப் பந்து போட்டி நடைபெற்றது.
நேற்று முன்தினம் பாண்டுகுடி அரசு பள்ளியில் நடைபெற்ற செஸ் போட்டியில் நம்புதாளை அரசு உயர் நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன் மாசானம் 2ம் இடம் பிடித்து, மாவட்ட அளவில் விளையாட தகுதி பெற்றார். தலைமை ஆசிரியர் (பொ) ரமேஷ், உடற் கல்வி ஆசிரியர் கண்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவனை பாராட்டினர்.
The post மாவட்ட அளவிலான செஸ் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு appeared first on Dinakaran.
