- மயிலாடு செக்டர்
- மயலதுதரா
- மயிலாடுதுறை மாவட்டம்
- ரூ
- கோடி
- தமிழ்நாடு
- அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- மயிலாடுதுறை
- தின மலர்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.432 கோடியே 92 இலட்சம் மதிப்பீட்டிலான 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 54,461 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.48 கோடியே 17 லட்சம் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.113 கோடியே 51லட்சம் மதிப்பீட்டிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி. ரூ.271 கோடியே 24லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 54,461 பயனாளிகளுக்கு வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள் பள்ளிக் கல்வித் துறை சார்பில், திட்டப்படுகை. துளைசேந்திரபுரம். சின்னங்குடி, தாழஞ்சேரி, கண்டபுரம், தில்லையாடி, கீழாத்துகுடி, திருமுல்லைவாசல், வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய இடங்களில் உள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.12 கோடியே 26லட்சம் செலவில் வகுப்பறைக் கட்டடங்கள். வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், செம்பனார்கோவில் மற்றும் தரங்கம்பாடி ஆகிய இடங்களில் ரூ.3 கோடியே 75லட்சம் செலவில் சார்பதிவாளர் அலுவலகங்கள்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், கோனேரிராஜபுரம். திருவெண்காடு, காளி, நல்லூர் ஆகிய இடங்களில் ரூ.2 கோடி செலவில் பொது அலகு கட்டடங்கள், தலச்சங்காடு, திருவாடுதுறை. இளையாலூர், கருவாழக்கரை, காரைமேடு, கொற்கை, நெடுவாசல், நெம்மேலி ஆகிய இடங்களில் ரூ.2 கோடியே 45 லட்சம் செலவில் துணை சுகாதார நிலையங்கள். மேலப்பெரும்பள்ளம். முருகமங்கலம், சீர்காழி, புதுப்பட்டினம் ஆகிய இடங்களில் ரூ.3 கோடியே 80 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
சீர்காழி அரசு மருத்துவமனையில் ரூ.60 லட்சம் செலவில் கண் அறுவை சிகிச்சை பிரிவுக் கட்டடம். வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், குத்தாலத்தில் ரூ.3 கோடியே 20 லட்சம் செலவில் 1000 மெ.டன் கொண்ட சேமிப்புக் கிடங்கு. நெடுஞ்சாலைத் துறை சார்பில், மாப்படுகை கடலங்குடி சாலையில் பழவாற்றின் குறுக்கே ரூ.7 கோடியே 27 லட்சம் செலவில் பாலம்.என மொத்தம் ரூ.48 கோடியே 17 லட்சம் செலவில் 47 முடிவுற்றப் பணிகளை முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின்நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையம், குத்தாலம் பேரூராட்சியில் ரூ.2 கோடியே 44லட்சம் மதிப்பீட்டில் விலங்குகள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மற்றும் தார்சாலைப் பணிகள், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலைப் பணிகள். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், பொறையாறில் உள்ள அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம், சித்தர்க்காட்டில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நோய் தடுப்பு மருந்து கிடங்கு.
குத்தாலம் வட்டம். கடலங்குடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே வாணாதிராஜபுரம் மற்றும் அரையபுரம் வாய்க்காலில் நீர் செல்லும் திறனை மீட்டெடுக்க ரூ.2 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் புதிய படுக்கை அணை. என மொத்தம், ரூ.113 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 3000 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள். 117 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் இயற்கை மரணம் உதவித் தொகை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 7000 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள். 12,086 பயனாளிகளுக்கு சுயஉதவிக் குழு வங்கி நேரடி கடன்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், 25,669 பயனாளிகளுக்கு குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம், தாட்கோ சார்பில் 124 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் நான்கு சக்கர வாகனங்கள். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில 167 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள். தொழிலாளர் நலன் மற்றம் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 654 பயனாளிகளுக்கு திருமண, கல்வி, இயற்கை மரண உதவித் தொகை, 1000 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள். கூட்டுறவுத் துறை சார்பில், 1,242 பயனாளிகளுக்கு பயிர்க்கடன். 10 பயனாளிகளுக்கு 50 சதவிகித மானியத்தில் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள்.
சமூகநலத்துறை சார்பில், 49 பயனாளிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவிகள். என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.271 கோடியே 24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 54,461 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார். இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன். தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், எம்பி சுதா, எம் எல் ஏக்கள் நிவேதா முருகன்,ராஜ்குமார், பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர் காந்த், தாட்கோ தலைவர் இளையராஜா, டிஆர்ஓ உமா மகேஸ்வரி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மயிலாடுதுறையில் 54,461 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி; ரூ.113.51 கோடியில் 12 புதிய திட்டப்பணிகள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.
