×

நத்தம் செந்துறையில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு

 

நத்தம், ஜூலை 9: நத்தம் அருகே செந்துறையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கத்தின் தாலுகா அளவிலான மாநாடு நடந்தது. ஒன்றிய தலைவர் சின்னையா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயந்தி, ஒன்றிய செயலாளர் பால்ராஜ் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவது போன்று உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

The post நத்தம் செந்துறையில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு appeared first on Dinakaran.

Tags : Disabled Persons Association Conference ,Natham Sendura ,Natham ,Taluga ,Tamil Nadu Association ,for the Rights of ,Disabled Persons and Defenders ,of All Kinds of Disabilities and Defenders ,Sentura ,Union President ,Sinnaia ,Jayanti ,Union Secretary ,Balraj ,Disabled Persons Association Conference in ,Dinakaran ,
× RELATED கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்