×

ஆந்திராவில் சோகம் கலப்பட கள் குடித்து 5 பேர் பலி

திருமலை:  ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜவொம்மாங்கி அடுத்த லோதொட்டி கிராமத்தில் நேற்று காலை 5 பழங்குடியினர் கள் குடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் குடித்த கள் கலப்படம் செய்யப்பட்டதாக தெரிகிறது. கள் குடித்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக மயக்கமடைந்து 5 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்த ராஜவொம்மாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கள் மாதிரிகளை சேகரித்து விசாரணை நடத்தினர். ஒரேநேரத்தில் மலை கிராமத்தை சேர்ந்த 5 பழங்குடி மக்கள் கலப்பட கள் குடித்து உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது….

The post ஆந்திராவில் சோகம் கலப்பட கள் குடித்து 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Andhra ,Tirumala ,Andhra State ,East Godavari District ,Rajavommangi ,Lothotti ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் அமராவதி சட்டமன்ற...