×

தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

திருமலை: ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனே நோயாளிகள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள குக்கட்பலி என்ற இடத்தில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மருத்துவமனையின் கீழ் தளத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ உடனே மளமளவென வேகமாக பரவியது. அங்கிருந்த நோயாளிகள் பதறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.  நடக்க முடியாமல் இருந்த நோயாளிகளை உறவினர்கள் கைகளில் தூக்கிக்கொண்டு வெளியே வந்தனர். தகவலறிந்த குக்கட்பலி தீயணைப்புத்துறையினர் 2 வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்தில் மருத்துவ பொருட்கள் எரிந்து சேதமானது. விபத்துக்கான காரணம் குறித்து குக்கட்பலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Hospital ,Tirumala ,Hyderabad ,Telangana ,
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி...