×

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: டிடிவி வேண்டுகோள்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கை:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முற்பட்ட போது அப்பெண் கத்திக் கூச்சலிட்டதால் ஆற்றில் அழுத்திக் கொலை செய்யப்பட்ட செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: டிடிவி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : DTV ,Chennai ,Public Affairs ,Dinakaran ,Koradacheri ,Thiruvarur district ,
× RELATED ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில்...