- சப்பர் பவானி
- உலக மீட்பர் கோவில்
- தேவகோட்டை
- பஞ்சாயத்து
- ராம்நகர், தேவகோட்டை
- வணக்கத்திற்குரியவர்
- பிஷப்
- சிவகங்கை மாவட்டம்
- ஆனந்தம்
- ராம்நகர்
- ரெவ்.
- வின்சென்ட் அமல்ராஜ்...
தேவகோட்டை, ஜூன் 16: தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் பங்குத் திருவிழா சப்பர பவனியுடன் சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மறை மாவட்ட மேதகு ஆயர் ஆனந்தம் தலைமை வகித்து திருவிழா திருப்பலியை நிறைவேற்றினார்.ராம்நகர் பங்குத்தந்தை அருள்பணி வின்சென்ட் அமல்ராஜ் முன்னிலை வகித்து ஆயரோடு இணைந்து திருப்பலியை நிறைவேற்றினார்.
இவர்களோடு தேவகோட்டை வட்டார அதிபர் அருள் சந்தியாகு, புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஆரோக்கியசாமி, ஆரம்ப குருமார்களின் இயக்குநர் அருள்பணி தாமஸ் மற்றும் 25க்கும் மேற்பட்ட குருமார்கள் திருப்பலியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பின்பு சப்பர பவனியானது ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் இருந்து தொடங்கி ராம்நகர் முதலாவது வீதி, எழுவன்கோட்டை ரோடு, ராம்நகர் மூன்றாவது வீதி வழியாக ஆலயம் வந்து சேர்ந்தது. இத்தேர்பவனியில் அருள்சகோதரிகள், ராம்நகர் பங்கு இறைமக்கள் மற்றும் கிளை கிராம இறை மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post உலக மீட்பர் ஆலயத்தில் சப்பர பவனி appeared first on Dinakaran.
