×

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.71 லட்சம்

மேல்மலையனூர், ஜூன் 12: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வேண்டுதலுக்காக அம்மனுக்கு பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்தி அம்மனை வழிபட்டு அம்மன் அருளை பெற்று செல்கின்றனர். இவ்வாறு கடந்த மாதம் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை எண்ணும் பணி நேற்று கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பக்தர்கள் பணம் ரூ.71,09,289, தங்கம் 170 கிராம், வெள்ளி 605 கிராம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் உதவி ஆணையர் சக்திவேல், விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், செஞ்சி ஆய்வாளர் சங்கீதா, அறங்காவலர் குழு தலைவர் மதியழகன், அறங்காவலர்கள் சுரேஷ் ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் மேலாளர் மணி, மணியம்குமார், மேற்பார்வையாளர் பாக்கியலட்சுமி, கணக்காளர் சதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். மேலும் உண்டியல் எண்ணும் பணி வீடியோ பதிவு செய்யப்பட்டது. பாதுகாப்பு பணியில் மேல்மலையனூர் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

The post மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.71 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Temple ,Melmalaiyanur ,Melmalaiyanur Angalamman Temple ,Villupuram district ,
× RELATED ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி...