×

ரியல் எஸ்டேட் அதிபருக்கு மண்டை உடைப்பு: வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடிக்கும் போலீஸ்

ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே மணிமங்கலம் அடுத்த வரதராஜபுரம், பரத்வாஜ் நகரை சேர்ந்தவர் யுவராஜ் (47), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 28ம் தேதி தனது மூன்று வயது குழந்தையுடன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கேட்டை குழந்தை திறக்கும் போது அந்த அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்கில் பிஜேபி நிர்வாகி செல்வமணியின் கார் மீது கேட் இடித்துள்ளது. அப்போது அருகில் நின்றிருந்த பிஜேபி நிர்வாகி செல்வமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் யுவராஜிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரும்பு பைப் மற்றும் உருட்டு கட்டையால் யுவராஜை தாக்கியுள்ளனர். இதில் யுவராஜின் மண்டை உடைந்தது. இதில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைகண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 5 தையல் போடபட்டது. இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் யுவராஜ் புகார் அளித்துள்ளார். இரண்டு நாட்கள் மேலாகியும் இதுவரை போலீசார் வழக்குபதிவு செய்யாமல் இன்று போய் நாளை வா என்று இழுத்தடித்து வருகின்றனர். மேலும் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கியது பிஜேபி பிரமுகர் என்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்யவும் விசாரணை நடத்தவும் முன்வரவில்லை என்று யுவராஜ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது….

The post ரியல் எஸ்டேட் அதிபருக்கு மண்டை உடைப்பு: வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடிக்கும் போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Sripurudur ,Yuvaraj ,Bharatvaj ,Manimangalam ,Varadarajapuram ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி...