×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுக்கூட்டம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. நெடுஞ்சாலை, பதிவுத்துறை, கூட்டுறவு ஆகிய துறைகளின் சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, பெரியகருப்பன், துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவது பற்றி முதல்வர் அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister Mu. K. ,Stalin ,Chennai ,Chief Minister ,Mu. K. ,Velu ,Murthy ,Chakarapani ,Peryakarapan ,K. ,Dinakaran ,
× RELATED ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர்...