×

மாநாட்டிற்காக மிரட்டி வசூல் இந்து முன்னணி நிர்வாகிகள் 2 பேர் கைது

 

மதுரை, மே 24: மதுரையில் இந்து முன்னணி சார்பில் வரும் ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதற்காக இந்து முன்னணியைச் சேர்ந்த மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் டீக்கடை நடத்தி வரும் மாணிக்கமூர்த்தி(48), இதே பகுதியை சேர்ந்த பிரகாஷ்(36) ஆகியோர், பல்வேறு பகுதிகளில் வசூலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இருவரும் பச்சரிக்காரத் தெருவில் உள்ள ஒரு வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து அவர் தெற்குவாசல் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தார்.

 

The post மாநாட்டிற்காக மிரட்டி வசூல் இந்து முன்னணி நிர்வாகிகள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Two Hindu Front ,Madurai ,Muruga ,Hindu Front ,Manickamurthy ,Madurai Jaihindpuram ,Prakash ,
× RELATED ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி...