ஸ்பிக்நகர், மே 23: முத்தையாபுரம் தங்கம்மாள்புரம் 6வது தெருவை சேர்ந்த முத்து மகன் அஜய் (22). இவர், தனது வீட்டில் உள்ள போக்கஸ் லைட் பல்பை மாற்றுவதற்காக சுவிட்ச் போர்டு பிளக்கை கழற்றி உள்ளார்.
அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post முத்தையாபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாப பலி appeared first on Dinakaran.
