×

பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு கடத்தல் ரூ.3 கோடி ஹைட்ரோ கஞ்சா பறிமுதல்

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஸ்கூட் விமானம் நேற்று திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு ஆண் பயணியின் உடைமைளில் 3 கிலோ எடையுள்ள ஹைட்ரோ கஞ்சா (உயர்ரகம்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சாவின் மதிப்பு ரூ.3 கோடி என்று கூறப்படுகிறது.

The post பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு கடத்தல் ரூ.3 கோடி ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bangkok ,Trichy ,Scoot ,Singapore ,Trichy International Airport ,Air Intelligence Unit ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது