- தமிழ்நாடு அரசு
- புது தில்லி
- பரமேஸ்வரன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பஹல்காம், ஜம்மு மற்றும்
- காஷ்மீர்
- எய்ம்ஸ்
- தில்லி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- ஏகேஎஸ் விஜயன்
புதுடெல்லி: ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர், சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். பரமேஸ்வரனுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பாதிக்கப்பட்ட பரமேஸ்வரனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் இதர விஷயங்களுக்கான அனைத்து செலவினங்களையும் தமிழ்நாடு அரசு ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்ததாக ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது பரமேஸ்வரனின் பெற்றோர், தமிழ்நாடு அரசின் ஆணையாளர் ஆஷிஷ் குமார் உடன் இருந்தனர்.
The post தீவிரவாத தாக்குதலில் தமிழர் காயம்: தமிழ்நாடு அரசின் பிரதிநிதி ஆறுதல் appeared first on Dinakaran.
