×

ரூ.38.40 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்


சென்னை: சென்னை மாநகர நூலக ஆணைக்குழுவின் கீழ் மெரினா கடற்கரை பகுதியில் செயல்படும் மெரினா கிளை நூலகம், நூலக நிதியின் மூலம் ரூ.38.40 லட்சத்தில் குளிரூட்டப்பட்ட நூலகமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நூலகத்தில் சிறுவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், பட விளக்க கதைப்புத்தகங்கள் அடங்கிய comic’s cor*er அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் சென்னை நகரம் குறித்த தகவல்கள் அடங்கிய அரிய நூல்கள் உள்ளிட்ட 7500 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், 1,337 உறுப்பினர்களும், 3 புரவலர்களும் நூலகத்தில் உள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மாநகராட்சியின் நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு, மண்டலக்குழு தலைவர் எஸ்.மதன்மோகன், மாமன்ற ஆளுங்கட்சி துணைத் தலைவர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன், பொது நூலகத்துறை இயக்குநர் சங்கர், சென்னை மாநகர நூலக ஆணைக்குழு தலைவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன், இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் நிறுவனர் அருண்கிருஷ்ணமூர்த்தி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post ரூ.38.40 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Marina Branch Library ,Udhayanidhi Stalin ,Chennai ,Marina ,Chennai Municipal Library Commission ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...