×

பேரவைக்குள் இனி யாரும் பதாகைகள் பேட்ஜ் அணிந்து வர கூடாது: உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவு


சென்னை: சட்டப்பேரவைக்குள் இனி யாரும் பதாகைகள் மற்றும் பேட்ஜ் போன்றவை அணிந்து வரக்கூடாது என்று பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதத்தின் போது அதிமுக உறுப்பினர்கள் அவைக்குள் பதாகையை காட்டி கோஷம் எழுப்பினர். அதை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்த அவை காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். அதைதொடர்ந்து சபாநாயகர் அப்பாவு ஒரு தீர்ப்பு வாசித்தார். அதில் ‘அதிமுக உறுப்பினர்கள் சிலர் இன்று ஒரு பதாகையை தூக்கி பிடித்து கொண்டிருந்தனர். அவர்கள் இன்று சட்டப்பேரவையில் இருந்து ெவளியேற்றப்பட்டுள்ளனர். பேரவை விதிகளின்படி இரண்டு முறை கூட்டத்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டால், இந்த கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் கலந்து கொள்ள முடியாது.

அதனால் அவர்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் கலந்துகொள்ள அனுமதிக்க முடியாது. மு.க.ஸ்டாலின்(முதல்வர்): சபாநாயகர் ஒரு தீர்ப்பு அளித்துள்ளீர்கள். அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் கலந்து கொள்ள முடியாது என்று சொல்லி உள்ளீர்கள். அவர்களின் நடவடிக்கைகளை கண்டித்து இன்று ஒரு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்றும் மற்ற கூட்டங்களில் அவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்பாவு(சபாநாயகர்): முதல்வரின் கோரிக்கையை ஏற்று நாளை முதல் அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதேபோன்று சட்டப்பேரவைக்குள் இனி பதாகைகள் மற்றும் வில்லைகள்(பேட்ஜ்) அணிந்து வர யாருக்கும் அனுமதி கிடையாது என்றார்.

18 அதிமுக உறுப்பினர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை
சட்டப்பேரவையில் இன்று அரசுக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் ஒரு பதாகையை தூக்கி காட்டினர். அப்போது அதிமுகவினரை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்படி பதாகையை தூக்கி காட்டிய 18 அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் முழுவதும் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து பேரவை தலைவர் அப்பாவு உத்தரவிட்டார். அதிமுக உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பொன் ஜெயசீலன், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், செந்தில்குமார், சித்ரா, ஜெயக்குமார், பாலசுப்பிரமணியன், நல்லதம்பி, சம்பத்குமார், அசோக்குமார், அம்மன் கே.அர்ஜூனன் உள்ளிட்ட 18 பேர் அறையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அதிமுகவினர் வெளியேறிய நிலையில் அவையில் பேசிய மூத்த உறுப்பினர் செங்கோட்டையன்
சட்டபேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றிய நிலையில், அதிமுக மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் சட்டப் பேரவை நடவடிக்கையில் கலந்து கொண்டார். அவர் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசினார். அப்போது அவரது மேல் சட்டை பாக்கெட்டில் ஒரு பேட்ஜ் அணிந்து இருந்தார். அதை கழற்றிவிட்டு பேசும்படி சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்று, அதிமுக மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் தனது சட்டையில் அணிந்து இருந்த பேட்ஜை நீக்கிவிட்டு பேசினார்.

The post பேரவைக்குள் இனி யாரும் பதாகைகள் பேட்ஜ் அணிந்து வர கூடாது: உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Speaker ,Appavu ,Chennai ,Assembly ,Tamil Nadu Assembly ,AIADMK ,Dinakaran ,
× RELATED திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான...