×

வெள்ளப்பெருக்கு காரணமாக மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

தேனி: தேனியிலிருந்து 54 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மேகமலை அருவிக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவியில் குளித்து மகிழ்வது வழக்கம். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அருகே அமைந்துள்ளதால் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாகவும் மேகமலை அருவி அமைந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் நேரங்களில் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டால் சுற்றுலா பயணிகள் மேகமலை அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக தடை விதிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் தேனியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்து வரும் கன மழையால் மேகமலை அருவியில் கடந்த 2 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வர வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்த தடை நேற்று 2வது நாளாக நீடித்து வந்த நிலையில் அருவியில் ஏற்பட்டுள்ள தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று 3வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் நடமாற்றமின்றி மேகமலை அருவி வெறிச்சோடி காணப்படுகிறது. அருவியில் நீர்வரத்து சீராகும் வரை தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post வெள்ளப்பெருக்கு காரணமாக மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Meghamalai Falls ,Theni ,Western Ghats ,Dinakaran ,
× RELATED கடல் நம்மை பிரித்தாலும் மொழியும்,...