×

மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு

திருவனந்தபுரம்: மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். வக்ஃபு சட்டத்தை நிறைவேற்றிய உடனேயே ஆர்எஸ்எஸ் ஊதுகுழலான ஆர்கனைஸர் வார இதழில் தேவாலய நிலம் தொடர்பான கட்டுரை வெளியிட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான சங்பரிவாரின் ஆழமான, வேரூன்றிய விரோதத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டுரை உள்ளது. சிறுபான்மையினர், அவர்களது நிறுவனங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற முயற்சியை கட்டுரை வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

The post மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Thiruvananthapuram ,RSS ,Organizer ,Sangh Parivar ,
× RELATED திருப்பதியில் பேனருடன் நின்ற அதிமுக...