×

நாடாளுமன்ற ஒப்புதலின்றி கச்சத்தீவை இலங்கைக்கு விட்டு கொடுத்தது அரசியலமைப்புக்கு எதிரானது: மக்களவையில் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் பேசிய டி.ஆர்.பாலு, “தமிழக சட்டப்பேரவையில் கடந்த புதன்கிழமை(ஏப்.2) கச்சத்தீவை மீட்டெடுப்பது தொடர்பான ஒரு தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்து, அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு, “கச்சத்தீவை கடந்த 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் ஒரு ஒப்பந்தம் இலங்கைக்கு இந்தியா வழங்கியது. நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காமல் நிலப்பகுதியை விட்டு கொடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் 1976ல் மாநில அரசு அல்லது நாடாளுமன்றத்தை கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்ற ஒப்புதலின்றி கச்சத்தீவை இலங்கைக்கு விட்டு கொடுத்தது அரசியலமைப்புக்கு எதிரானது. அதை விரைவாக மீட்டெடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

The post நாடாளுமன்ற ஒப்புதலின்றி கச்சத்தீவை இலங்கைக்கு விட்டு கொடுத்தது அரசியலமைப்புக்கு எதிரானது: மக்களவையில் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Lanka ,People's Republic ,D. R. The Baloo ,New Delhi ,Malakawa ,T. R. Balu ,Chief Minister ,Stalin ,Kathmandu ,Tamil ,D. R. BALU ,KACHATDIWA ,Kachatiwa ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…