- ஆலங்குடி
- புதுக்கோட்டை
- ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
- அஜித் குமார்
- நாடிமுத்து
- அம்பேத்கர் நகர், ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
- பழைய நீதிமன்ற
- முக்கம்
- கலைஞர்…
புதுக்கோட்டை, ஏப்.3: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் விளம்பர பதாகை வைத்ததில் ஏற்பட்ட மோதலில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் நாடிமுத்து மகன் அஜித்குமார்(23). இவர், ஆலங்குடி பழைய நீதிமன்றம் முக்கம், கலைஞர் காலனி பகுதியில் விளம்பரப்பதாகை ஒன்று வைத்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் தனது அனுமதி இல்லாமல் எப்படி விளம்பரப் பதாகை வைக்க முடியும் எனக்கூறி, நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அஜித்குமாரின் தந்தை நாடிமுத்து(50)ஐ, தாக்கியுள்ளனர்.
காயமடைந்தவரை ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தந்தையுடன் அஜித் குமார் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த்தை(27) ஆகியோர் மருத்துவமனையில் இருந்தனர். அப்போது, அங்கு வந்த மணி அஜித்குமார், அவரது சகோதரர் பிரசாந்தை கட்டையால் தாக்கினார். இதில், படுகாயமடைந்தவர்களை ஆலங்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து, பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாடிமுத்து, பிரசாந்த் ஆகியோரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து, ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆலங்குடியில் விளம்பர பதாகை வைத்த தகராறு appeared first on Dinakaran.
