×

சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

பெரியபாளையம், மார்ச் 26: சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், செவ்வாய்க்கிழமையான நேற்று சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். பொது தரிசனம் 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே உள்ளூர் பக்தர்கள் மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள் செல்லும் வழியில் முந்தியடித்தபடி செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

The post சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Siruvapuri Murugan Temple ,Periyapalayam ,Balasubramaniam Swamy Temple ,Siruvapuri ,Periyapalayam… ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...