×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தனிப்படை முன்பு வரும் 27ம் தேதி சுதாகரன் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை சிபிசிஐடி தீவிரப்படுத்தியுள்ளது. கோடநாடு வழக்கில் இதுவரை 250 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன் appeared first on Dinakaran.

Tags : CBCID ,Zayalalitha ,Sudharan ,Kodanadu ,Chennai ,Sudakharan ,Jayalalithaa ,C. B. C. I. D. Summon ,Samman ,Godanadu ,CBCID Summon ,Dinakaran ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...