அரியலூர், மார்ச் 21: அரியலூர்மாவ ட்ட கலெக்டர் ரத் தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற வகுப்பினர் மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) கலந்து கொள்ள பயிற்சிகள் வழங்கவுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) தேர்ச்சி பெற பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி பெற பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 65 சதவீதமும் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். இப்பயிற்சியானது மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் சென்னை மாவட்டத்திலுள்ள மணலி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் 11 மாதங்கள் தங்கி பயில பயிற்சிக்கான தொகை, உணவு மற்றும் தங்கும் இடத்திற்குக்கான கட்டணத் தொகையினை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும், கடந்த ஆண்டில் 30 மாணவர்கள் தங்கி பயின்றதில் 26 மாணவர்கள் தேர்ச்சி பெற்று IIT, NIT போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி பெற விருப்பமுள்ள மாணவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம் அறை எண்.225, 2வது தளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர். தொலைப்பேசி எண்.04329 – 228315 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post எஸ்சி, எஸ்டி வகுப்பு மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவு தேர்வுக்கு பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.
