
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கச்சத்தீவு திருவிழாவையொட்டி கடலுக்கு செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், நேற்று முன்தினம் 403 படகுகளில் கடலுக்கு சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடம் கென்னடியின் விசைப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் படகிலிருந்த மீனவர்கள் சங்கர் (53), அர்ஜூனன் (35), முருகேசன் (49) ஆகிய 3 பேரை சிறைபிடித்தனர். படகையும் பறிமுதல் செய்தனர்.
இலங்கை கடற்படையின் சிறைபிடிப்பு நடவடிக்கையை கண்டித்து, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவ சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் பொருளாளர் பிரான்சிஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று (மார்ச் 19) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்தம் காரணமாக 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 5,000க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு; ரூ.1 கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.
The post இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்: ரூ.1 கோடி வரை வர்த்தக இழப்பு appeared first on Dinakaran.
