சென்னை: ஒமிக்ரான் மற்றும் கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து மக்களை பயமுறுத்தி வருகிறது. இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மான் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் நீடித்து வருகிறது. எனவே, வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுகிறேன். தற்போது நலமுடன் இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் துல்கர் சல்மானின் தந்தையும், மலையாள முன்னணி நடிகருமான மம்முட்டிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.அன்னா பென்னுக்கு பாதிப்பு: ஹெலன் படத்திற்காக சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருது பெற்றவர் அன்னா பென். கும்பளாங்கி நைட்ஸ், கப்பேலா படங்களில் நடித்தார். தற்போது நாரதன், என்னிட்டு அவசானம், காபா, நைட் டிரைவ் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த ஹெலன் படம்தான் தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் ஆனது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர், ‘‘வாசனை இழப்பைத் தவிர கொரானாவுக்குரிய அனைத்து அறிகுறிகளையும் நான் உணர்ந்தேன். இதனால் பரிசோதனை செய்தேன். அதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக கொரோனாவிடம் இருந்து தப்பித்துக் கொண்டே இருந்தேன். இப்போது மாட்டிக் கொண்டேன். அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள்’’ என்றார்….
The post துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று appeared first on Dinakaran.