- Dikshitars
- கன சபா
- சிதம்பரம் நடராஜர் கோயில்
- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- கனக சபை
- ஆருத்ரா
- சிதம்பரம் நடராஜா கோயில்...
- சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனக சபை
- தின மலர்
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கி இருந்தது. அரசின் இந்த உத்தரவை மீறி கனசபை மீது பக்தர்களை ஏற விடாமல் தீட்சிதர்கள் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கனசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுப்பதாகவும், அரசு உத்தரவை மீறிய கோயில் தீட்சிதர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிதம்பரம் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 6 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டு தீட்சிதர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசின் உத்தரவை மீறி தீட்சிதர் செயல்பட்டுள்ளார்.
தீட்சிதர்கள் மீதான வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது என்றார். காவல்துறையின் வாதத்தை ஏற்ற நீதிபதி வழக்கை ரத்து செய்ய மறுத்து தீட்சிதர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல் கனகசபை மீது ஏறி நின்று தரிசனம் செய்ய முயன்ற ஜெயசீலா என்ற பெண் பக்தரை, சாதி பெயரைச் சொல்லித் திட்டியதாக, தீட்சிதர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி தீட்சிதர்கள் கவுரி சங்கர் உள்ளிட்ட 8 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
The post சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
