- சாரீஸ்
- மகளிர் தினம்
- புரட்சி பாரதம்
- திருவள்ளூர்
- K.V.Kuppam
- எம்.எல்.ஏ. பூவை எம்.ஜெகன்மூர்த்தி
- பூந்தமல்லி
- மாநில மகளிர் பிரிவு
- உமாதேவி…
- தின மலர்
திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சி சார்பில் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை எம்.ஜெகன் மூர்த்தி உத்தரவின் பேரில் மகளிர் தின விழா பூந்தமல்லி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு மாநில மகளிரணி தலைவி உமாதேவி தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணைச் செயலாளர் கராத்தே அபிராமி முன்னிலை வகித்தார். மாநில மகளிரணி செயலாளர் ஸ்டெல்லாமேரி வரவேற்றார்.
விழாவில் கட்சியின் முதன்மைச் செயலாளர் ருசேந்திரகுமார், தலைமை நிலைய செயலாளர் பூவை முகிலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநிலச் செயலாளரும், செம்பரம்பாக்கம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவருமான பழஞ்சூர் வின்சென்ட், 500 பெண்களுக்கு புடவைகளை வழங்கி வாழ்த்தினார். இதில் மாநில இளைஞரணி நிர்வாகிகள் மணவூர் மகா வலசை தர்மன், மாநிலச் செயலாளர்கள் கூடப்பாக்கம் குட்டி, பரணி மாரி, பாரதிதாசன், மாநில தொழிற்சங்க செயலாளர் மதிவாசன், மாநில வழக்கறிஞர் அணி தலைவர் சைமான்பாபு,
மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் தாமஸ் பர்ணபாஸ், ஏபிஎல்எப் மாநிலச் செயலாளர் ரவிச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துராமன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் சிவராமன், மாவட்ட தலைவர் மகிமைதாஸ், அந்தோணி, தெய்வானை உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். இதில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
The post மகளிர் தின விழாவை முன்னிட்டு 500 பெண்களுக்கு புடவைகள்: புரட்சி பாரதம் சார்பில் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.
