×

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி மானியம் தொடர்பான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை : அமைச்சர் உத்தரவு

சென்னை: சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலத்தில், தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணி திறனாய்வு கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், அமைச்சர் பேசியதாவது: தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் 20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் வாரிய உறுப்பினர்களை விரைவாக சென்று சேர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அமலாக்க அலுவலர்கள் ஆய்வின்போது தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதனை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் வீர ராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் ராமன், வாரிய செயலாளர்கள், மண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், வட்டார தொழிலாளர் இணை ஆணையர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி மானியம் தொடர்பான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை : அமைச்சர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Labor Commissioner's Office ,Labor Welfare ,Minister ,C.V. Ganesan ,Labor Department… ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...