சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மகாபாரதத்தில் சரஸ்வதி நதி குறித்து பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. சிந்து நாகரிகம் என்று மட்டும் சொல்லாமல் சரஸ்வதியை சேர்ந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்ல வேண்டும். மஹாபாரதத்தில், கிருஷ்ணனின் அண்ணன், சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. அதை, நாசாவின் செயற்கைக்கோள் படம் உறுதிப்படுத்தி விட்டது.
சட்லெஜுக்கும், யமுனைக்கும் இடையில் ஓடியதை அது விளக்கியது. அது, 2,500 ஆண்டுகளுக்கு முன் வற்றி இருக்கலாம் என, கருதப்படுகிறது என்றெல்லாம் ஆர்.என்.ரவி தனது மேதமையை வெளிப்படுத்தி இருக்கிறார் வரலாற்று அறிவு சிறிதும் இல்லாமல் கதை அளந்து இருக்கிறார். மேலும், ஆளுநர் ஆர். என்.ரவி, ஆரியர்கள் இந்நாட்டின் பூர்வ குடிமக்கள் என்று தொடர்ந்து பிதற்றி வருவது கடும் கண்டனத்துக்குரியது. நாள்தோறும் தனது உளறல்கள் மூலம் ஆளுநர் பொறுப்பிற்கு தான் தகுதியற்றவர் என்பதை ஆர்.என்.ரவி நிரூபித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ஆளுநர் பொறுப்பிற்கு ரவி தகுதியற்றவர் வரலாற்று அறிவு சிறிதும் இல்லாமல் கதை அளக்கிறார்: – வைகோ கண்டனம் appeared first on Dinakaran.
