சென்னை: வரலாற்றில் இல்லாத ஒன்றை இருப்பதாக புகுத்துவதே தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். NCERT பாடதிட்டத்தில் சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்ற பாடத்தின் மூலம் இல்லாத ஒரு நாகரிகத்தை கட்டமைக்க பாஜக முயற்சி. பாஜக அரசு கோடிகளைக் கொட்டித் தேடியும் சரஸ்வதி நதி இருந்ததற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் இதுவரை இல்லை. வரலாற்றில் இல்லாததை புகுத்துவதால்தான் தேசியக் கல்வி கொள்கையை எதிர்க்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
The post வரலாற்றில் இல்லாததை புகுத்துவதே தேசிய கல்வி கொள்கை: ஆளுநருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி appeared first on Dinakaran.
