×

துபாய் ஓபன் இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி இணை சாம்பியன்

துபாய்: துபாய் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸி பாபிரின் இணை அபாரமாக ஆடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. துபாய் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டி துபாயில் நேற்று நடந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த யூகி பாம்ப்ரி, ஆஸி வீரர் அலெக்ஸி பாபிரின் இணை, பிரிட்டன் வீரர் ஹென்றி பேட்டன், பின்லாந்து வீரர் ஹாரி ஹெலியோவாரா இணையுடன் மோதியது.

முதல் செட்டை பேட்டன், ஹாரி இணை கைப்பற்றியது. 2வது செட் யூகி பாம்ப்ரி இணை வசமானது. அதன் பின் டை பிரேக்கர் மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில், 10 – 8 என்ற கணக்கில் பாம்ப்ரி, பாபிரின் இணை அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இதையடுத்து பாம்ப்ரி, பாபிரின் இணைக்கு சாம்பியன் பட்டமும், வெற்றிக் கோப்பையும், ₹1.7 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

The post துபாய் ஓபன் இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி இணை சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Yuki Bhambri ,Dubai Open ,Dubai ,India ,Alexei Babir ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு