
*3 மாதம் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்
கோபி : ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கெட்டிச்செவியூரில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு வேதியியல் பாட ஆசிரியராக செஞ்சிலா பாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன் (59) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் கடந்த ஆண்டு பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீ முருகனிடம் புகார் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் அளித்த தகவலின் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பான அலுவலர் ஆகியோர் பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் தலைமை ஆசிரியர் ஸ்ரீ முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் கோபி மகளிர் காவல் நிலைய போலீசார், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேதியியல் ஆசிரியர் சந்திரசேகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து சந்திரசேகரன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவரது செல்போன் சிக்னலை வைத்து அவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் மறைந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சந்திரசேகரை கைது செய்தனர்.
The post மாணவிகளிடம் சில்மிஷம்; ஆசிரியர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.
