வெள்ளிச்சந்தை, பிப். 22: மணவாளக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் கென்னடி. அவரது மகன் சகாய கிங்சன் (24). இவருடைய அக்காள் அஷ்வினி அதே பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்பவருக்கு தவணை முறையில் இன்வெட்டர் பேட்டரி வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அமல்ராஜ் முறையாக தவணை கட்டவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அஷ்வினி தனது தம்பியிடம் கூறியுள்ளார். இதையடுத்து சகாய கிங்சன், அமல்ராஜ் வீட்டுக்கு சென்று தவணை தொகையை கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அமல்ராஜ், பிரவீன் (33), வெலிங்டன் (53), ஜெசிமா (50) ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சகாய கிங்சன் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வாலிபரை மிரட்டிய அமல்ராஜ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மணவாளக்குறிச்சி அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.
