×

சொத்து வரி அபராதம் நிறுத்தம்: கே.என்.நேரு

சென்னை: சொத்து வரிக்கான அபராதம் நிறுத்தப்படுகிறது; சொத்து வரி மட்டுமே செலுத்தினால் போதும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். போதிய சாலை வசதிகள் இல்லாததால் வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளலூர் பேருந்து நிலையத்துக்காக கட்டப்பட்ட கட்டடத்தை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. கோவை புறநகரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.

The post சொத்து வரி அபராதம் நிறுத்தம்: கே.என்.நேரு appeared first on Dinakaran.

Tags : K. N. Nehru ,Chennai ,Minister ,Vellalur bus station ,Vellalur ,bus station ,K. N. Neru ,Dinakaran ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா