- உத்திரமேரூர் பேரூராட்சி
- உத்திரமேரூர்
- டவுன் பஞ்சாயத்து
- பொன். சசிகுமார்
- நிர்வாக அலுவலர்
- பழனி குமார்
- வருவாய் அதிகாரி
- திவ்யா
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பழனிகுமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிகள் வருவாய் அலுவலர் திவ்யா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் போதை பொருள் விற்பனை உள்ளிட்டவைகள் தொடர்பான புகார்களுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய செல்போன் செயலி மூலம் புகார் அளிப்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், போதையில்லா தமிழகத்தை உருவாக்க பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகள் வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
The post உத்திரமேரூர் பேரூராட்சியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.
