×

‘பிங்க் ஆட்டோ’ திட்டம் வரும் மார்ச் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு

சென்னை: சென்னை மாநகரத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பிங்க் ஆட்டோ திட்டம் தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் வாகன கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

சென்னையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும் பெண்களுக்கான சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக ரூ.1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி ரூ. 2 கோடி செலவில் 200 இளஞ்சிவப்பு ஆட்டோக்களை (பிங்க் ஆட்டோ) இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பிங்க் ஆட்டோ திட்டம் தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும். பெண்கள் மட்டும்தான் ஓட்டுநராக இருக்க வேண்டும். அவர்கள் பிங்க் நிறத்தில் சீருடை அணிந்திருக்க வேண்டும். ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் வாகனம் இருக்கும் இடத்தைக் கண்டறியும் சாதனம் உள்ளிட்டவை இருக்க வேண்டும்” என மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பிங்க் ஆட்டோ திட்டம் அடுத்த மாத முதல் சென்னையில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிங்க் ஆட்டோ திட்டம் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் கருத்து தெரிவிக்கலாம் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post ‘பிங்க் ஆட்டோ’ திட்டம் வரும் மார்ச் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pink ,
× RELATED தாமிரபரணியை மீட்க ‘நோடல்’ அதிகாரி...