×

இரு மொழிக் கொள்கைக்காக தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டமே நடந்துள்ளது: அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோடு : இரு மொழிக் கொள்கைக்காக தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டமே நடந்துள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அதிமுகவில் இருந்து தூக்கி வெளியே தள்ளியதால் திமுகவில் இணைந்தேன். கட்சியில் உள்ள தொண்டர்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே பதவிக்கு வர முடியும். ஒரு கட்சியில் இருந்து யாரையும் பதவியில் கொண்டு வந்து திணிக்க முடியாது. ஈரோட்டில் பெரியாரால் தொடங்கப்பட்ட சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஏற்று நடத்துவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு 3 ஆண்டுக்கு பிறகு வழங்கியுள்ளது.

சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் ஐஏஎஸ் அகாடமி, மாபெரும் நூலகம், விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ஆனால் விளையாட்டு மைதானம், நூலகம், ஐஏஎஸ் அகாடமி அமைக்க மத்திய அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை. தெரு நாய்களை கட்டுப்படுத்த ஈரோடு, திருப்பூர் ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த மத்திய அரசின் கருத்து மக்களுக்கு எதிரானது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறுவது தவறான அணுகுமுறை. இரு மொழிக் கொள்கைக்காக தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டமே நடந்துள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post இரு மொழிக் கொள்கைக்காக தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டமே நடந்துள்ளது: அமைச்சர் முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Muthusamy ,Erode ,Nadu ,
× RELATED சொல்லிட்டாங்க…