×

சமூக வளர்ச்சிக்கு சாதி எதிரானது: ஐகோர்ட் கருத்து

சென்னை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா, ஆவல்பட்டி கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் மற்றும் சென்ராய பெருமாள் கோவில்களுக்கு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக திட்டம் வகுக்குமாறு தரப்பட்ட விண்ணப்பத்தை விசாரிக்கும்படி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு உத்தரவிடக் கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அறநிலையத்தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, சாதியை நீடித்து நிரந்தரமாக்கச் செய்யும் வகையிலான மனுதாரரின் கோரிக்கை, அரசியல் சாசனம் மற்றும் பொது கொள்கைக்கு விரோதமானது. சாதியில்லா சமுதாயம் தான் நம் அரசியல் சாசனத்தின் இலக்கு. சாதியை நிரந்தரமாக்கச் செய்யும் எதையும் நீதிமன்றம் பரிசீலிக்காது. சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, சமூக வளர்ச்சிக்கு எதிரானது. சாதி அடிப்படையில் எந்த பாரபட்சமும் இருக்க கூடாது. சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசியல் சாசனத்தை வகுத்த தலைவர்களின் கனவாக இருந்துள்ளது.

அரசியல் சாசனம் வகுத்து 75 ஆண்டுகள் கடந்த நிலையில், சாதி என்ற தேவையில்லாத சுமையை, சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை. அறங்காவலர் பதவிக்கு, பக்தி, நம்பிக்கையுடன், ஆன்மீக, அற சிந்தனை தான் அவசியம். சாதி அல்ல எனக் கூறி, மனுதாரரின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்யுமாறு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டார். அரசியல் சாசனம் வகுத்து 75 ஆண்டுகள் கடந்த நிலையில், சாதி என்ற தேவையில்லாத சுமையை, சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை.

The post சமூக வளர்ச்சிக்கு சாதி எதிரானது: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Hindu Religious and Endowments Department ,Varadaraja Perumal ,Senraya Perumal ,Avalapatti ,Pollachi taluka ,Coimbatore district… ,
× RELATED தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு...