×

விஜய் சேதுபதியின் படம் மலேசியாவில் தொடங்கியது

கோலாலம்பூர்: மலேசியாவில் பூஜையுடன் விஜய் சேதுபதியின் புதிய படம் தொடங்கியது. ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் நடைபெற்றது.

இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பிஎஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்யும் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆர்.கோவிந்தராஜ் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ.கே. முத்து மேற்கொள்கிறார். சண்டை காட்சிகளை தினேஷ்குமார் சுப்பராயன் அமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை செவன் சி’ஸ் என்டர்டெய்ன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் தயாரிக்கிறார்.

The post விஜய் சேதுபதியின் படம் மலேசியாவில் தொடங்கியது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : vijay sethapathy ,malaysia ,Kuala Lumpur ,Vijay Sethupathi ,Pooja ,P. ,Vijay Sedupathi ,Arumuka Kumar ,Vijay Sethaphi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மலேசியாவில் காவல் நிலையத்தில்...