புதுடெல்லி: நாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கையானது குறைந்து வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரக் ஓ பிரைன் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரக் ஓ பிரைன் மாநிலங்களவையில் நேற்று முன்தினம்,நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் 100 அமர்வுகளை கோருவதற்கும், ஒரு நிலையான நாடாளுமன்ற நாட்காட்டியை கொண்டிருப்பதற்கும் தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார். பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கு இது மிகவும் அவசியமாகும் என்றார்.
மேலும் எம்பி டெரக் ஓ பிரைன் தனது எக்ஸ் தள பதிவில் ‘‘நாடாளுமன்றத்தில் மக்களவை ஆண்டுதோறும் கூடும் அமர்வுகளின் எண்ணிக்கையானது 135 நாட்களில் இருந்து இப்போது 55 நாட்களாக குறைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் எம்பி மனோஜ் குமார் உற்பத்தித்திறன் மேம்பாடு மசோதா 2024 அறிமுகப்படுத்தினார். இதில் ஒவ்வொரு ஆண்டும் 120 நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார்.
The post நாடாளுமன்ற அமர்வின் எண்ணிக்கை குறைந்து வருகிறது: திரிணாமுல் எம்பி கருத்து appeared first on Dinakaran.
