×

வேலாயுதம்பாளையம புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

 

வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் தமிழ் நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் சுவாமி கோயில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

The post வேலாயுதம்பாளையம புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Pugazhimalai ,Balasubramaniam Swamy Temple ,Velayudhampalayam ,Tamil ,English New Year ,Balasubramaniam Swamy ,Pugazhimalai Balasubramaniam Swamy Temple ,Karur district ,
× RELATED கரூர் கொங்கு கல்லூரியில் பொங்கல் தின விழா